ஆ என்னில் நூறு வாயும் நாவும்
இருந்தால் கர்த்தர் எனக்கு
அன்பாகச் செய்த நன்மை யாவும்
அவைகளால் பிரசங்கித்து
துதிகளோடே சொல்லுவேன்
ஓயா தொனியாய்ப் பாடுவேன்.
Verse 2
என் சத்தம் வானமளவாக
போய் எட்ட வேண்டும் என்கிறேன்;
கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாக
என் ரத்தம் பொங்க ஆசிப்பேன்;
ஒவ்வொரு மூச்சும் நாடியும்
துதியும் பாட்டுமாகவும்.
Verse 3
ஆ என்னில் சோம்பலாயிராதே
என் உள்ளமே நன்றாய் விழி;
கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதே
கருத்துடன் இஸ்தோத்திரி;
இஸ்தோத்திரி என் ஆவியே
இஸ்தோத்திரி என் தேகமே.
Verse 4
வனத்திலுள்ள பச்சையான
எல்லா வித இலைகளே
வெளியில் பூக்கும் அந்தமான
மலர்களின் ஏராளமே
என்னோடே கூட நீங்களும்
அசைந்திசைந்து போற்றவும்.