Aarainthu Paarum Karthare
Song: Aarainthu Paarum Karthare
Verse 1ஆராய்ந்து பாரும் கர்த்தரே
என் செய்கை யாவையும்
நீர் காணுமாறு காணவே
என்னில் பிரகாசியும் .
Verse 2ஆராயும் எந்தன் உள்ளத்தை
நீர் சோதித்தறிவீர் ;
என் அந்தரங்க பாவத்தை
மா தெளிவாக்குவீர்.
Verse 3ஆராயும் சுடரொளியால்
தூராசை தோன்றவும் ;
மெய் மனஸ்தாபம் அதனால்
உண்டாக்கியருளும் .
Verse 4ஆராயும் சிந்தை யோசனை
எவ்வகை நோக்கமும்
அசுத்த மனோபாவனை
உள்ளிந்திரியங்களும்.
Verse 5ஆராயும் மறைவிடத்தை
உமா தூய கண்ணினால் ;
ஆரோசிப்பேன் என் பாவத்தை
உம பேரருளினால் .
Verse 6இவ்வாறு நீர் ஆராய்கையில்
சாஷ்டாங்கம் பண்ணுவேன் ;
உம சரணார விந்ததில்
பணிந்து போற்றுவேன்