Aathumaavae Karththaraiyae
Song: Aathumaavae Karththaraiyae
Verse 1ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு (2)
Verse 2நான் நம்புவது அவராலே(கர்த்தராலே) வருமே வந்திடுமே
Verse 3விட்டுவிடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு
விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீ தான் (2)
உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் (2) -நான்
Verse 4உன்னதமான கர்த்தர் கரத்தின்
மறைவில் வாழ்கின்றோம்
சர்வ வல்லவர் நிழலில்
தினம் வாசம் செய்கின்றோம் (2)
வாதை அணுகாது தீங்கு நேரிடாது (2) -நான்
Verse 5பாழாக்கும் கொள்ளை
நோய் மேற்கொள்ளாமல்
பாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார் (2)
சிறகின் நிழலிலே மூடி மறைக்கின்றார் (2) -நான்
Verse 6கர்த்தர் நமது அடைக்கலமும் புகலிடம் ஆனார் – நாம்
நம்பியிருக்கும் நம் தகப்பன் என்று சொல்லுவோம் (2)
சோதனை ஜெயிப்போம் சாதனை படைப்போம் (2) -நான்
Verse 7நமது தேவன் என்றென்றைக்கும் சதாகாலமும்
இறுதிவரை வழிநடத்தும் தந்தை அல்லவா (2)
இரக்கம் உள்ளவர் நம் இதயம் வாழ்பவர் (2) -நான்