Verse 1அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே நாம் பாடுவோம்
இந்நாளில் சாவை வென்றோராம்
விண்மாட்சி வேந்தர் போற்றுவோம்.
அல்லேலூயா!
Verse 2அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே நாம் பாடுவோம்
அஞ்ஞாயிறு அதிகாலை
நல் மாதர் மூவர் கல்லறை
சென்றாரே காண தேகத்தை.
Verse 3அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே நாம் பாடுவோம்
அம்மூவர் பார்த்தார் தூதன்தான்;
வெண் ஆடை தூதன் செல்லுவான்;
நாதர் கலிலேயா செல்வார்
Verse 4அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே நாம் பாடுவோம்
பயந்த சீஷர் ராவிலே
கண்டார் கேட்டார் தம் நாதரே!
என் சமாதானம் உமக்கே!
Verse 5அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே நாம் பாடுவோம்
உயிர்த்த நாதர் கண்டோமே
என்றோரைத் தோமா கேட்டானே;
நம்பான் சந்தேகங்கொண்டானே.
Verse 6அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே நாம் பாடுவோம்
வா தோமா என் விலாவைப் பார்;
இதோ என் கைகள் கால்கள் பார்;
நம்பு சந்தேகம் தீர் என்பார்.
Verse 7அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே நாம் பாடுவோம்
தோமா சந்தேகம் தீர்ந்தனன்;
விலா கை கால்கள் நோக்கினன்;
என் நாதா! ஸ்வாமி! என்றனன்.
Verse 8அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே நாம் பாடுவோம்
காணாமல் நம்பின பாக்கியர்;
மாறா விஷ்வாசம் வைப்பவர்
அமர வாழ்வு பெறுவர்.
Verse 9அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே நாம் பாடுவோம்
மா தூயதாம் இந்நாளில் நாம்
நம் பாடல் தோத்ரம் படைப்போம்;
பரனைப்போற்றி மகிழ்வோம் அல்லேலூயா!