ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
ஞான ரட்சகர் நாதர்நமை - இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் புகழ - ஆன
Verse 2
சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்
எங்கள் ரட்சகரேசு நமை வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் புகழ் - ஆன
Verse 3
முந்து வருட மதினில் மனுடரில் வெகு
மோச கஸ்திகள் தனிலேயுழல
தந்து நமக் குயிருடையுணவும் வெகு
தயவுடன் இயேசு தற்காத்ததினால் புகழ் - ஆன
Verse 4
பஞ்சப் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளை நோய் விஷ தோஷத்திற்கும்
தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை இத்
தரைதனில் குறைதணித் தாற்றியதால் புகழ் - ஆன
Add to Set
Login required
You must login to save songs to your account. Would you like to login now?