Verse 1அன்புள்ள ஸ்வாமி நீர் நிர்ப்பந்தமாக
மரிக்கத் தீர்க்கப்பட்ட தேதுக்காக?
நீர் என்ன செய்தீர் தேவரீரின் மீது
ஏன் இந்தத் தீது?
Verse 2வாரால் அடிப்பட்டு எண்ணமற்றீர்
குட்டுண்டு முள் முடியும் சூட்டப்பட்டீர்;
பிச்சுண்கத் தந்து உம்மைத் தூக்கினார்கள்
வதைத்திட்டார்கள்.
Verse 3இவ்வாதை யாவும் உமக்கெதினாலே
உண்டாயிற்று? ஐயோ என் பாவத்தாலே;
அதும்மை ஸ்வாமி இத்தனை அடித்து
வதை செய்தது.
Verse 4மா ஆச்சரியம் கர்த்தர் சாக வாரார்
நல் மேய்ப்பர் மந்தைக்காக ஜீவன் தாரார்
அடியார் தப்பக் குற்றமற்ற மீட்பர்
கடனைத் தீர்ப்பர்.
Verse 5ஆனாலும் ஒன்று உமக்கேற்றிருக்கும்;
நான் உம்மைப்பற்றி யாவையும் வெறுக்கும்
கருத்தாய்ப் பாவ இச்சையை வேர் பேர்க்கும்
பண் உமக்கேற்கும்.
Verse 6இதற்கும் என் சாமர்த்தியம் போதாது
பழைய துர்க்குணம் என்னால் நீங்காது;
நீர் உமதாவியை அளித்துவாரும்
பலத்தைத் தாரும்.
Verse 7அப்போ நான் உமதன் நிறைந்து
பூலோகக் குப்பைமேல் வெறுப்படைந்து
என் நெஞ்சை உமக்குண்மையாய்க் கொடுக்கும்
பலம் இருக்கும்.
Verse 8பரகதியிலே நான் வைக்கப்பட்டு
கெலிக்கும்போதெல்லாக் குறைவுமற்று
எப்போதும் உம்மை இயேசுவே துதிப்பேன்
இஸ்தோத்திரிப்பேன்.