Verse 1அன்புருவாம் எம் ஆண்டவா
எம் ஜெபம் கேளும் நாயகா;
நாங்கள் உம் ராஜ்ஜியம் ஆண்டாண்டும்
பாங்குடன் கட்ட அருளும்.
Verse 2வாலிபத்தில் உம் நுகமே
வாய்மை வலுவாய் ஏற்றுமே
வாழ்க்கை நெறியாம் சத்தியம்
நாட்ட அருள்வீர் நித்தியம்.
Verse 3அல்லும் பகலும் ஆசையே
அடக்கி ஆண்டு உமக்கே;
படைக்க எம்மைப் பக்தியாய்
பழுதேயற்ற பலியாய்.
Verse 4சுய திருப்தி நாடாதே
உம் தீர்ப்பை முற்றும் நாடவே;
வேண்டாம் பிறர் பயம் தயை
வீரமாய்ப் பின் செல்வோம் உம்மை.
5.திடனற்றோரைத் தாங்கிட
துக்கிப்பவரை ஆற்றிட;
வாக்கால் மனத்தால் யாரையும்
வருத்தா பலம் ஈந்திடும்.
Verse 5எளிதாம் வாழ்க்கை ஏங்கிட
தீங்கற்ற இன்பம் தேடிட
மன்னிக்க முற்றும் தீமையை
நேசிக்க மனு ஜாதியை.