LyricFront

Karthar Thooyar Thoniyai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
கர்த்தர் தூயர் தொனியாய் கதறி முகம் கவிழ்ந்தே இருள் சூழ்ந்த தோட்டத்திலே இதயம் நொறுங்கி ஜெபித்தார்
Verse 2
மரணத்தின் வியாகுலமோ மனிதர் துணை இல்லையோ தேவ தூதன் தேற்றிடவே தருணம் நெருங்க ஓப்படைத்தார் துன்ப சுமை சுமந்தார் :- கர்த்தர்
Verse 3
துக்கத்தால் தம் சீஷர்களே தலை சாய்த்து தூங்கினாரே தம்மை மூவர் கைவிடவே தூரமாய் கடந்தே திகிலடைந்தார் தன்னந்தனிமையிலே:- கர்த்தர்
Verse 4
பிதாவே இப்பாத்திரத்தின் பங்கினை நான் ஏற்றுக் கொண்டேன் ஆகட்டும் உமது சித்தம் அது நீங்கிடுமோ என்றுரைத்தார் ஆ! இரத்த வேர்வையுடன்:- கர்த்தர்
Verse 5
திறந்த கெத்சமனேயில் துணிந்து வந்த பகைஞன் என்ன துரோகம் செய்திடினும் எந்தன் சிநேகிதனே என்றழைத்தார் என்ன மா அன்பிதுவோ:- கர்த்தர்
Verse 6
பரமன் ஜெப சத்தமே ப+ங்காவினில் கேட்கிறதே பெருமூச்சுடன் அழைக்கும் அவரோடிணைந்தே கண்ணீருடன் ஆவியிலே ஜெபிப்பேன்:- கர்த்தர்
Verse 7
இயேசு தாங்கின துன்பங்கள் என்னைத் தாண்டியே செல்லாதே எனக்கும் அதில் பங்குண்டே சிலுவை மரணப்பாடுகளால் சீயோனில் சேர்ந்திடுவேன்:- கர்த்தா

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?