Verse 1ம் பாகம்
மாசில்லாமல் தூயதான
பளிங்கிலேயும் தெளிவான
சுத்தாங்க ஊற்றே
இயேசுவே;
கேரூபீங்கள் தூய சீரின்
பிரகாசம் யாவுந் தேவரீரின்
முன்பாக மங்கிப் போகுதே;
என் பாவத்தின் இருள்
அனைத்தும் உமக்குள்
தொலையட்டும்;
ஆ இயேசுவே நான் உமக்கே
ஒப்பாய் சுத்தாங்கமாகவும்.
Verse 2மனசார சாவுமட்டும்
பிதாவின் சித்தமே ஆகட்டும்
என்றீர் அமர்ந்த இயேசுவே;
என் மனமும் தெய்வ சித்தம்
என் நன்மை என்றதற்கு நித்தம்
கீழ்ப்பட்டடங்க உம்மையே
பின்பற்ற தேவரீர்
சகாயம்பண்ணுவீர்;
என்நோவிலும்
என் இயேசுவே நான் உமக்கே
ஒப்பாய் அமர்ந்திருக்கவும்.
Verse 3ராப்பகல் உறக்கமற்று
நல்மேய்ப்பராய்ப் பிரயாசப்பட்டு
நன்றாய் விழித்தீர் இயேசுவே;
நித்தம் நித்தமும் போதித்தீர்
மங்கா வெளிச்சக் கண்ணனே
விழித்துக் கெஞ்சவே
நான் உம்மிடத்திலே
படிக்கட்டும்;
ஆ இயேசுவே நான் உமக்கே
ஒப்பாய் விழித்திருக்கவும்.
Verse 4ம் பாகம்
நீர் நிறைந்த நேசமுள்ளோர்
எல்லாரின்மேலும் தயவுள்ளோர்
மகா அன்புள்ள இயேசுவே;
உம்மால் தீயோர்பேரிலேயும்
பகல் உதிக்கும் மாரிபெய்யும்
பெரிய உபகாரியே
ஆ இந்த உமது
குணம் என் மனது
அடையட்டும்;
என் இயேசுவே நான் உமக்கே
ஒப்பாய் அன்பாய் இருக்கவும்.
Verse 5குற்றமின்றி குரோதமற்று
எல்லா இகழ்ச்சியையும் பட்டு
மன்னித்தீர் சாந்த இயேசுவே;
தெய்வ வீட்டுக்காய் அல்லாமல்
நீர் வேறெரிச்சலைக் காட்டாமல்
இருந்தீர் ஆட்டுக்குட்டியே
நான் அந்தப் பக்தியாய்
மிகுந்த சாதுவாய்
இருக்கட்டும்;
ஆ இயேசுவே நான் உமக்கே
ஒப்பாக சாந்தமாகவும்.
Verse 6சுய மேன்மையைத் தேடாமல்
ஓர் மேட்டிமையைத் காட்டாமல்
மாதாழ்மையானீர் இயேசுவே;
வேலைக்காரன்போல் திரிந்தீர்
எல்லாரிலும் நீரே பணிந்தீர்
மகா பெரிய கர்த்தரே
ஆ என்னை உம்முட
அடிகளில் வர
படிப்பியும்;
என் இயேசுவே நான் உமக்கே
ஒப்பாகத் தாழ்மையாகவும்.
Verse 7தேவரீருட பிரிய
தெய்வீக சாயலை அணிய
வாஞ்சிக்கிறேன் என் ஜீவனே;
அதுக்குமதாவியாலும்
பலத்த சத்துவத்தினாலும்
சகாயம் செய்யும் இயேசுவே
நான் உமக்கேற்கிற
கனிகளைத் தர
எக்காலமும்;
நான் உம்மிலே நிலைக்கவே
சகாயம் கட்டளையிடும்.