Verse 1நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே
Verse 2செங்கடல்தனை நடுவாய் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியதே இந்நாள் வரையும்
தயவாய் மா தயவாய் -ஆ
Verse 3உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்தராய் இருக்க
கிருபையின் மகா தானமது வருங்
காலங்களில் விளங்க -ஆ
Verse 4மரணத்தை நீக்கியே ஜீவனை
அருளிய மாபெரும் கிருபை
மாநிலத்தோர்க் கீந்தார் இயேசு
சுவிசேஷ ஒளியாய் -ஆ
Verse 5ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்
சேவையில் மரித்தார்
சேர்ந்து வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது நிற்போம் -ஆ
Verse 6மித்ருக்களான பலர் நன்றியிழந்தே
சத்துருக்களாயினாரே
சத்தியத்தை சார்ந்து தேவ
சித்தம் செய்திடுவோம் -ஆ
Verse 7அழைக்கப்பட்டோரே நீர் உன்னத அழைப்பினை
அறிந்தே வந்திடுவீர்
அளவில்லாத் திரு ஆக்க மிதனை
அவனியோர்க் களிப்பீர் -ஆ