LyricFront

Ontre Thevai Yentruraitheer

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஒன்றே தேவை என்றுரைத்தீர் ஸ்வாமி அதை நாடுவேன்; என்னை உம்மண்டைக் கழைத்தீர் நான் உலகை எத்தனை தழுவினாலும் பலதிலே மெத்த உழன்ற்றுத்தாலும் அனைத்தும் அவத்தம் ஒன்றானதை நான் அடைந்தால் நான் பூரண பாக்கியவான்.
Verse 2
இதைச் சிஷ்டிகளிடத்தில் தேடினால் கிடையாதே; இயேசு ஸ்வாமியின் வசத்தில் வாழ்வெல்லாம் இருக்குமே; என் ஆத்துமமே உன் இக்கட்டில் உவாவும் இம்மானுவேலே பரிபூரணம் யாவும் அகப்படப் பண்ணுவர் அவரை நீ உன் பங்கும் உன் கதியுமாகப் பிடி.
Verse 3
இந்தப் பங்கையே மரியாள் தனக்குத் தெரிந்தாளே வாஞ்சையாகிய பசியால் கிறிஸ்தின் பாதத்தண்டையே இருந்து தன் போதகர் சொன்ன தெய்வீக மொழியைத் தன் நெஞ்சில் உட்கொண்டு லௌகீக சிந்திப்பை வெறுத்துத் தன் மீட்பரையே அடைந்த்தால் மனத்தில் பூரித்தாளே.
Verse 4
நானும் அந்த வாஞ்சையோடே உம்மையே என் இயேசுவே அண்டிக்கொண்டேன் நீர் என்னோடே ஐக்யமாகும் ஜீவனே பெருங் கூட்டத்தோடே அநேகர் சேர்ந்தாலும் நான் உம்மையே நேசத்தால் ஆசையினாலும் தொடருவேன் உமக்குள் யாவும் உண்டே. நீர் சொல்லுவதாவியும் ஜீவனுமே.
Verse 5
ஞானத்தின் எல்லா நிறைவும் உம்மில் இருக்கின்றது; கீழ்ப்படிகிற இசையும் ஞானங் கற்கிறதற்குத் தாழ்வாகிய சிந்தையும் என்ல் உண்டாக நீர் எனக் கொத்தாசையைப் பண்ணுவீராக. நன்றாக நான் உம்மையே கற்றுக்கொண்டே அறிந்தால் நான் தேறின ஞானியாமே.
Verse 6
உம்மை மாத்திரம் முன்னிட்டுக் கர்த்தரை நான் சேரலாம்; சிலுவையிலே மரித்து ரத்தஞ் சித்தின நீர்தாம் என் நித்திய நீதி; இதன்றி அடியேன் ரட்சிப்பை அடைய வேறொன்றும் அறியேன்; உம்மண்டை ஒதுங்கின பாவியை நீர் வெண் வஸ்திரத்தாலே அலங்கரித்தீர்.
Verse 7
நான் தெய்வீகச் சாயலான புதுச் சிஷ்டியாக நீர் என்னைப் பரிசுத்தமான மனிதனுமாக்குவீர். நீர் அதற்குமாகக் கொடுக்கப் பட்டோரே நீர் அதற்குச் சகல ஈவுமுள்ளோரே. நீர் என்னை அழிந்துபோம் இச்சைக்கெல்லாம் விலக்கிக் காப்பாற்றும் என் ஜீவன் நீர் தாம்.
Verse 8
தேவரீரின் மீட்பினாலே மா பூரிப்பாகின்றது; உம்முடைய ரத்தத்தாலே ஓர் முறை பரத்துக்கு நீர் உட்பிரவேசித்து நித்தியமான ரட்சிப்பை உண்டாக்கிப் பிசாசுக்குண்டான பலத்தை முறித்தால் நீங்கலானேன் கர்த்தாவை அப்பா என்றும் தொழுகிறேன்.
Verse 9
இப்போ பூரணக் களிப்பு என் நெஞ்சை நிரப்பிற்று; நல்ல மேய்ச்சலின் தித்திப்பு என்னைத் திருப்தி யாக்கிற்று. உம்மோடே நான் ஐக்கியமாய் ஆறுதலுக்கும் நான் பக்தியில் உம்மைக் கண்ணோக்குவதற்கும் சரியாம் மகிழ்ச்சியை எங்கும் பெறேன் சரியாந் தித்திப்பை ருசித்துமிரேன்.
Verse 10
ஆகையாலே நான் தெரிந்து பற்றும் பேறெல்லாம் நீரே; என்னை நீர் ஆராய்ந்தறிந்து உண்மையாக்கும் இயேசுவே; நான் போம் வழி வாதையாமோ என்று பாரும் என் கால்களை மோட்ச வழியிலே காரும். நான் உம்மை ஆதாயப்படுத்திக் கொண்டெ இருக்குவும்; மற்றது குப்பையாமே.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?