LyricFront

Ooivunaal Vinnil Kondadu

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர் பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்? வீரர்க்கு கிரீடம் தொய்ந்தோர் சுகிப்பார் ஸ்வாமியே யாவிலும் யாவும் ஆவார்.
Verse 2
ராஜ சிங்காசன மாட்சிமையும் ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும் இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார் அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்?
Verse 3
மெய் சமாதானத் தரிசனமாம் அக்கரை எருசலேம் என்போம் நாம் ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கே வேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே.
Verse 4
சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும் தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்? பேரருள் ஈந்திடும் ஆண்டவா நீர் பக்தரின் ஸ்தோத்திரம் என்றும் ஏற்பீர்.
Verse 5
ஆங்குள்ளோர் ஓய்வுநாள் நித்தியமாம் விடிதல் முடிதல் இல்லாததாம் தூதரும் பக்தரும் ஓயாமலே ஓர் ஜெய கீர்த்தனம் பாடுவாரே
Verse 6
பாபிலோன் போன்ற இப்பாரின் சிறை மீண்டு நம் தேசம் போய்ச்சேரும்வரை எருசலேமை நாம் இப்பொழுதும் வாஞ்சித்து ஏங்கித் தவித்திடுவோம்.
Verse 7
தந்தையினாலும் குமாரனிலும் ஆவியின் மூலமும் யாவும் ஆகும்; திரியேக தெய்வத்தை விண் மண்ணுள்ளார் சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வாழ்த்திடுவார்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?