தூய்மையான மரியாளே
நாதர் பாதம் நீங்காது
வாய்மையோடு சேவை ஆற்றி
சென்றாள் எங்கும் ஓயாது
நாதா நாங்கள் தாழ்மையோடும்
ஊக்கத்தோடும் மகிழ்வாய்
யாதும் சேவை செய்ய உந்தன்
ஆவி தாரும் தயவாய்
Verse 3
மீட்பர் சிலுவையில் தொங்கி
ஜீவன் விடக் கண்டனன்
மீண்ட நாதர் பாதம் வீழ்ந்து
யார்க்கும் முன்னர் கண்டனன்
நாதா வாழ்வின் இன்பம் நண்பா
அற்றே நாங்கள் சோர்கையில்
பாதம் சேர்த்து ஈறில்லாத
இன்பம் தாரும் நெஞ்சினில்