LyricFront

Pithave Mei Vivagathai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
பிதாவே மெய் விவாகத்தைக் கற்பித்துப் காத்து வந்தீர் நீர் அதினால் மனிதரை இணைத்து வாழ்வைத் தந்தீர். அதந்கெப்போதுங் கனமும் மிகுந்த ஆசீர்வாதமும் நீர்தாமே வரப்பண்ணும்.
Verse 2
நன்னாளிலுந் துன்னாளிலும் ஒரே நெஞ்சை அளியும் நீர் எங்கள் இருவரையும் உம்மண்டை நடப்பியும் கர்த்தா உம்மைமுள்ளிட்டெதை நன்றாக வாய்க்கப் பண்ணும்.
Verse 3
அடியார் பார்க்கும் வேலையை ஆசீர்வதித்து வாரும். நீர் உம்முடைய தயவை அடியாரக்குக் காரும். முகத்தின் வேர்வையோடப்போ சாப்பிடும் அப்பத்திற்கல்லோ நீரே நல்ருசி ஈவீர்.
Verse 4
நீரே ஆசீர்வதித்கையில் தடுக்கவே கூடாது. அப்போதெண்ணெய்கலயத்தில் குறைபட மாட்டாது. குறைவை நிறைவாக்குவீர். நீர் பேசும் வார்த்தையால் தண்ணீர் நல் ரசமாக மாறும்.
Verse 5
நீரே அனுப்புந் துன்பத்தைச் சகிக்கச் செய்வோர் நீரே இராத்திரியில் அழுகை ஆனாலும் தேவரீரே காலையில் மகிழ்வீய்கிறீர் அனைத்தையும் நன்றாக்கினீர் என்றும்மையே துதிய்போம்.
Verse 6
ஆ ஜீவ ஊற்றாம் இயேசுவே நீங்காத ஜீவன் ஈவீர் என் ஆத்துமத்தை நேசமே. மணந்து ஏற்றுக் கொள்வீர். ஆ ஞான மணவாளனே இங்கங்கும் அடியாருக்கே குறைச்சல் ஒன்றும் இல்லை.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?