LyricFront

Priyamana Yesuve

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ம் பாகம் பிரியமான இயேசுவே என் நெஞ்சைத் தயவாக நீர் பூரிப்பாக்கி என்னிலே மிகுந்த நிறைவாக தெய்வீக அன்பை ஊற்றியே பேரருள் தந்த உம்மையே நான் துதிசெய்வேனாக.
Verse 2
என் நெஞ்சில் உம்மால் பற்றின அன்பென்னும் தீ எரியும்; என் மனதும்மால் உத்தம மகிழ்ச்சியை அறியும்; நான் உம்மை நோக்கும் போதெல்லாம் என் துக்கம் உம்மிலே உண்டாம் அருளினால் தெளியும்.
Verse 3
நீர் என் வெளிச்சம்; உம்மால் திறந்த முகமாக நான் பிதாவின் இன்ப நெஞ்சைத்தான் என் ஆறுதலுக்காக கண்ணோக்கும்போது தயவாய் நீர் என்னை நீங்கா ஜோதியாய் பிரகாசிப்பிப்பீராக.
Verse 4
நீர் மோட்சத்துக்குப் போம் வழி; உனக்குள்ளான யாரும் தப்பிப் போகார்; ஆ இந்நெறி விலகினோர் எல்லாரும் கெட்டழிந்து போவார்களே; வழியாம் ஸ்வாமீ உம்மிலே நிலைக்க என்னைக் காரும்
Verse 5
நீர் சத்தியம்; நான் உம்மையே தெரிந்து கொண்டிருப்பேன்; மாறா மெய்ப்பொருள் நீரே வீண் மாய்கையை வெறுப்பேன்; உம்மாலே பாக்கியம் வரும்; மெய்யே என் நெஞ்சை என்றைக்கும் நான் உமக்கே படைப்பேன்.
Verse 6
நீர் ஜீவன்; என்னை நீர் நீரே பலத்தால் இடைகட்டும்; திடன் இல்லா அந்நேரமே என் நெஞ்சில் ஊக்கம் தாரும் தெய்வீக ஜீவன் என்னிலே மென்மேலும் வளர்ந்தோங்கவே நல்லாவியாலே காரும்.
Verse 7
ம் பாகம்
Verse 8
நீர் ஜீவ அப்பம்; பஞ்சத்தில் உம்மால் என்பசி ஆறும்; நான் போம் வனாந்தரங்களில் என் உள்ளம் உம்மை நாடும்; பிதாவின் ஈவாய் மன்னாவே நீர் என்னைப் பாவ இச்சைக்கே விலக்கிக் காத்துக் கொள்ளும்.
Verse 9
நீர் ஜீவ ஊற்று; உம்மாலே என் ஆத்மத் தாகம் தீரும்; நீர் தரும் ஈவு நித்தமே சுரக்கும் தண்ணீராகும்; நீரூற்றாய் என்னில் ஊறுமேன் நிறைவாய் நித்தம் தாருமேன் ஆரோக்கியமும் சீரும்.
Verse 10
நீர் என்னை ஜோடிக்கும் உடை நீர் என் அலங்கரிப்பு; நான் உம்முடைய நீதியை அணிவதென் விருப்பு; பூலோகத்தின் சிங்காரமாம் விநோத சம்பிரமம் எல்லாம் என் ஆவிக்கு வெறுப்பு.
Verse 11
நீர் நான் சுகித்து தங்கிடும் அரண்மனையும் வீடும்; புசல் அடித்தும் விருதா பேய் வீணாய் என்னைச் சீறும்; நான் உம்மில் நிற்பேன் ஆகையால் கெடேன்; பொல்லார் எழும்பி நீர் என் வழக்கைத் தீரும்.
Verse 12
என் மேய்ப்பராய் இருக்கிறீர் என் மேய்ச்சலும் நீர்தாமே; காணாமல் போன என்னை நீர் அன்பாக மீட்போராமே; இவ்வேழை ஆட்டை என்றைக்கும் நீர் விலக விடாதேயும் நான் உம்முடை யோனாமே.
Verse 13
நீரே நான் என்றும் வாஞ்சிக்கும் மா நேசமுள்ள நாதர்; நீரே என் ஆசாரியரும் பலியுமான கர்த்தர்; நீர் என்னை ஆளும் ராஜாவும் உம்மோடே எந்தப் போரிலும் ஜெயிப்பேன் மா சமர்த்தர்.
Verse 14
ம் பாகம்
Verse 15
நீர் உத்தம சிநேகிதர் என் நெஞ்சும் மேலே சாயும்; நீர் உத்தம சகோதரர் நீர் என்னைப் பார்க்கும் தாயும் நீர் நோயில் பரிகாரியே உம்மாலே ஆறிப்போகுமே என் காயமும் விடாயும்.
Verse 16
படையில் நீர் சேனாபதி வில் கேடகம் சீராவும்; கரும் கடலில் நீர் வழி காண்பிக்கும் சமுக்காவும்; எழும்பும் கொந்தளிப்பிலே நீர் என் நங்கூரம் இயேசுவே நான் ஒதுங்கும் குடாவும்.
Verse 17
நீர் ராவில் என் நட்த்திரம் இருளில் என் தீவர்த்தி; குறைவில் நீர் என் பொக்கிஷம் தாழ்விலே என் உயர்ச்சி; கசப்பிலே என் மதுரம்; நான் தொய்ந்தால் மீண்டும் என் மனம் பலக்க நீர் என் சக்தி.
Verse 18
நீர் ஜீவனில் விருட்சமும் நீர் செல்வங்கள் பொழியும் பூங்காவனமும் என்றைக்கும் சுகம் தரும் கனியும்; முள்ளுள்ள பள்ளத்தாக்கிலே என் ஆவிக்கு நீர் இயேசுவே குளிர்ந்த பூஞ்செடியும்.
Verse 19
நீர் துக்கத்தில் என் ஆறுதல் நீர் வாழ்வில் என் களிப்பு; நீர் வேலையில் என் அலுவல் பகலில் என் சிந்திப்பு; நீர் ராவில் அடைக்கலம் நீர் தூக்கத்தில் என் சொப்பனம் விழிப்பில் என் குறிப்பு.
Verse 20
ஆ ஒப்பில்லாத அழகே! நான் எத்தனை சொன்னாலும் என் நாவினாலே கூடாதே; நான் நாவினாலே கூடாதே; நான் என்ன வாஞ்சித்தாலும் அதெல்லாம் நீரே இயேசுவே; ஆ தயவுள்ள நேசரே நீர் என்றும் என்னை ஆளும்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?