LyricFront

Thaalvilirunthu Kooppidum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
தாழ்விலிருந்து கூப்பிடும் என் சத்தங் கேட்டன்பாக என் அழுகை அனைத்துக்கும் செவி கொடுப்பீராக; கர்த்தாவே பாவக் குற்றத்தை நீர் மன்னியாமல் நீதியைப் பார்த்தால் யார் நிற்கக்கூடும்.
Verse 2
மன்னிப்பை எவனானிலும் தன் புண்ணியங்களாலே அடையான்; உம்மை யாவரும் தாழ்வான மனத்தாலே பணிந்து பயப்படவே மனத்தரிதிரருக்கே மன்னிக்கிறீர் கர்த்தாவே.
Verse 3
நான் கர்த்தரைக் கண்ணோக்குவேன் என் புண்ணியம் அவத்தம்; தெய்வன்பையே நான் நம்புவேன்; அதற்கு வாக்குத்தத்தம் மெய்யான வேதவார்த்தையில் உண்டாமே நான் என்மனத்தில் அதற்குக் காத்திருப்பேன்.
Verse 4
ராச்சாமங் காப்பவர் எப்போ விடியும் என்பதாக நிற்க என் மனமே நீயோ அதிக ஆவலாகக் கர்த்தாவை நோக்கிக்காத்திரு; ஆ இஸ்ரவேலே ஸ்வாமிக்குக் காத்தே இரு ரட்சிப்பார்.
Verse 5
என் பாவம் பெரிதாகிலும் தெய்வன் பதிகமாமே; கேடெத்தனை பெருகியும்; மீட்பதற்கும் பெரிதே ஆ இஸ்ரவேலின் பாவங்கள் அதைத்தும் நீக்கும் மீட்குதல் கர்த்தாவினாலே ஆகும்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?