தீயோர் சொல்வதைக் கேளாமல்
பாவத்துக்கு விலகி
பரிகாசரைச் சேராமல்
நல்லோரோடு பழகி
கர்த்தர் தந்த வேதம் நம்பி
வாஞ்சை வைத்து அதைத்தான்
ராப் பகலும் ஓதும் ஞானி
என்றும் வாழும் பாக்கியவான்.
Verse 2
நதி ஓரத்தில் வாடாமல்
நடப்பட்டு வளர்ந்து
கனி தந்து உதிராமல்
இலை என்றும் பசந்து
காற்றைத் தாங்கும் மரம்போல
அசைவின்றியே நிற்பான்;
அவன் செய்கை யாவும் வாய்க்க
ஆசீர்வாதம் பெறுவான்.
Verse 3
தீயோர் பதர்போல் நில்லாமல்
தீர்ப்பு நாளில் விழுவார்;
நீதிமான்களோடிராமல்
நாணி நைந்து அழிவார்;
இங்கே பாவி மகிழ்ந்தாலும்
பாவ பலன் நாசந்தான்;
நீதிமான் இங்கழுதாலும்
கர்த்தர் வீட்டில் வாழுவான்.