LyricFront

Theeyor Solvathai Kelamal

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
தீயோர் சொல்வதைக் கேளாமல் பாவத்துக்கு விலகி பரிகாசரைச் சேராமல் நல்லோரோடு பழகி கர்த்தர் தந்த வேதம் நம்பி வாஞ்சை வைத்து அதைத்தான் ராப் பகலும் ஓதும் ஞானி என்றும் வாழும் பாக்கியவான்.
Verse 2
நதி ஓரத்தில் வாடாமல் நடப்பட்டு வளர்ந்து கனி தந்து உதிராமல் இலை என்றும் பசந்து காற்றைத் தாங்கும் மரம்போல அசைவின்றியே நிற்பான்; அவன் செய்கை யாவும் வாய்க்க ஆசீர்வாதம் பெறுவான்.
Verse 3
தீயோர் பதர்போல் நில்லாமல் தீர்ப்பு நாளில் விழுவார்; நீதிமான்களோடிராமல் நாணி நைந்து அழிவார்; இங்கே பாவி மகிழ்ந்தாலும் பாவ பலன் நாசந்தான்; நீதிமான் இங்கழுதாலும் கர்த்தர் வீட்டில் வாழுவான்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?