Verse 1தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே - அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய்,
தினமும் நீ மனமே
Verse 2காசினிதனிலே நேசமதாகக்
கஷஷ்டத்தை உத்தரித்தே - பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கணடுணர் நீ மனமே
Verse 3பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே பின்னும் நேமியாம்
கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி மனமே
Verse 4காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கிவிடும் - என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே
Verse 5துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் - நீயும்
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக்
காப்பார் ஆசை கொள் நீ மனமே
Verse 6ப லோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்று நாமம் - அதைப்
ப ண்டுகொண்டால்தான் பொன்னகர்
வாழ்வில் புகுவாய் நீ மனமே