Verse 1உம்மண்டை, தேவனே நான் சேரட்டும்
சிலுவை சுமந்து நடப்பினும்
என் ஆவல் என்றுமே உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேர்வதே
Verse 2தாசன் யாக்கோபைப்போல், ராக் காலத்தில்
திக்கற்றுக் கல்லின்மேல் நான் துயில்கையில்
என்தன் கனாவிலே உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேர்வதே
Verse 3நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்
விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்
தூதர் அழைப்பாரே உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேர்வதே
Verse 4விழித்து உம்மையே நான் துதிப்பேன்
என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்
என் துன்பத்தாலுமே உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேர்வேனே