LyricFront

Yeppothum Yesu Naatha

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
எப்போதும் இயேசு நாதா உம்மைப் பின்பற்றுவேன் என்றே தீர்மானமாக நான் வாக்குக் கொடுத்தேன்; நீர் என்னைத் தாங்கிக் காப்பீர் அப்போது அஞ்சிடேன்; முன்சென்று பாதை காட்டும் நான் வழி தவறேன்.
Verse 2
பூலோக இன்பம் செல்வம் வீண் ஆசாபாசத்தால் என் ஆத்துமா மயங்காமல் தெய்வீக பலத்தால் நீர் துணைநின்று தாங்கும் என் அருள் நாயகா; தீங்கணுகாமல் காரும் மா வல்ல ரட்சகா.
Verse 3
ஆங்காரம் சுய சித்தம் தகாத சிந்தையால் மா கலக்கம் உண்டாகி நான் தடுமாறினால் நீர் பேசும் அருள் நாதா கொந்தளிப்படங்கும்; உம் நேச சத்தம் கேட்டு என் ஆவி மகிழும்.
Verse 4
பின்பற்றினால் விண் வீட்டில் பேரின்பம் பெறுவீர் என்றே உம் சீஷர் நோக்கி நீர் வாக்கு அளித்தீர்; அவ்வருள் வாக்கை நம்பி இவ்வேழை அடியேன் இதோ பின்செல்வேன் என்று பிரதிக்னை பண்ணினேன்.
Verse 5
ஓயாமல் பெலன் தாரும் உம்மடிச்சுவட்டில் கால் வைத்து நடந்தேகி நான் யாத்திரை செய்கையில் நீர் வழி காட்டி என்னை கைதாங்கி வருவீர்; அப்பாலே மோட்ச வீட்டில் பேர் வாழ்வை அருள்வீர்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?